25.7.20

          நானும் பீஷ்மன்தான்

என் இரண்டாவது மகன் திருமண நிச்சயதார்த்தம்
சம்பந்தி பக்கம் உறவுகள் அறிமுகம் ஒருபெண் நல்லவிதமாக புடவையுடுத்தி
இப்படி பார்ப்பதே குறைந்த காலமிது!
அறிமுகம் செய்த பொழுது லேசா அதிரந்தேன்!
எங்கேயோ பலநாள் பழகிய மாதிரிஒரு இன்ப அதிர்வு!
எனக்கு 62 வயது
அந்த பெண்ணிடம் நேரிடையாக கேட்கிறேன் 11ம் வகுப்பு படிக்கிறாள்!
வயதுக்கு மீறிய வளர்சசி!
அவளும் புதிதாக பார்க்கவில்லை
அன்றைய நிகழ்ச்சி முடியும் வரை அவர்கள் பக்கத்தில் என்னிடம் உரையாடியவள் அவளே!
உனக்காக இன்னொரு மகன் எனக்கு இல்லாமல் போயவிட்டதேன்னு சொல்லி சிரிக்கும் அளவில் அன்று விடை பெற்றோம்
வெகுநாள் அந்த குழந்தை நினைவு இருந்தது
பிறகு கொரோனா புண்ணியத்தில் என் மகன் திருமணம் அவர்கள் ஊரிலேயே சிக்கனமாக நடக்க
அந்த ஊர் மக்களிடம் நான் நன்றாக பழகியதில்  அந்த பெண் பங்கு அதிகம்
பிறகு விடை பெரும் நேரம் ,எல்லோருக்கும்
சொல்வதுபோல் வீட்டுக்கு வரவேண்டும்னு சொன்னேன் அந்த பெண்ணுக்கும் தான்
பேருந்துகள் கிடையாது காரில் வாருங்கள் என்றேன் !காரில் வந்து வீட்டு வாசலில் இரங்குவேன்! என்று அந்த பெண்ணும் சொன்னாள் !அப்பதான் எனக்கு சுரீர் என்று உரைத்தது!
பல வருடம் முன்
என் வாலிப காலம்!
திருமணத்திற்கு நானே பெண் தேடி கொண்டிருந்த 25 வயது காலம்
என் சக பெண் பணியாளர் என் பிரிவை சேர்ந்தவர் அவருக்கு தெரிந்த பெண் பற்றி சொல்ல பெண் பார்க்க அம்மாவுடன் போயிருந்தேன், லட்சணமாகயிருந்தாள்! நல்ல பாடலும் பாடினாள் !
நான் சம்மதித்ததாகத்தான் காட்டியும் ஆயிற்று!
என் அண்ணா அவர் மனைவி இந்த பெண்ணை பார்த்து வந்து முகம் சுளித்தார்கள் ஏற்றபடியில்லைன்னு சொன்னார்கள் எனக்கும் மேலும் 1 ,2 பெண்களை பார்க்கலாம்னு சொல்ல அலட்சியம் !நாள் கடத்தினோம் !
பிறகு அவள் தந்தை நேரிடையாகவே வந்து கேட்டார் !அண்ணன் அருகில் இல்லை முடிவு சொல்ல முடியவில்லை! அவர் கெஞ்சி பார்த்தார் என்னமோ மிருக குணம் மறுத்துக்கொண்டேயிருந்தேன்!
அவர் நடுவில் ஒரு வர்த்தையை விட்டார் சொந்தத்தில் பையனிருக்கிறான் நீங்கள் பார்த்துவிட்டுபோனதால் அவள் அவர் பேச்சே வேண்டாம்' என்கிறாள் என்றார்
அப்ப வேண்டவே வேண்டாம் என்று மறுத்து விட்டேன்
அவர் வருத்தத்துடன் போய்விட்டார்!
பிறகு என் சக பெண்மணி சொல்லி பார்த்தாலள் நான் அவரை தவிர்த்துவந்தேன்
ஒரு நாள் அவர் என்னை பார்த்து சொன்னார் 'அவன் எங்களை சாதாரணமாக நினைத்து விட்டான் ஒருநாள் காரில் வந்து இறங்கி என்னை பற்றி புரியவைப்பேன் 'என்று சொன்னாளாம்!
அத்துடன் அவளை மறந்துவிட்டேன்
ஆனால் அதன் பின் அவள் பட்ட மன வேதனையின் பலனை அனுபவித்தேன்
ஒருமுறை ஒரு வது வீட்டிக்கு பெண் பார்க்க சற்று தாமதமாக போனேன் அவர்கள் வீட்டில் ஒரு குழந்தை மின்சாரம் தாக்கி இறந்து விட்டது !
வேறொரு இடத்தில் பெண் பார்க்க போனபோது அருகிலிருக்கும் ஒரு கோவிலில் இருக்க சொன்னார்கள் இருட்டி வட்டது அவர்கள் வரவேய்ல்லை அந்த பெண்ணுக்கு வேறு எண்மாம்!
அம்மா அந்த முதல் பெண் சாபமாயிருக்கும் என்றாள் !என் வரட்டுகவுரவம் மீண்டும் கேட்க முடியவில்லை  !
பிறகு கோவில் குளம் பிரார்த்தனை பரிகாரம் செய்து நல்ல யிடம் அமைந்து இரண்டு பிள்ளைகள் திருமணம் என வருடங்களே ஓடி வட்டது
இப்பொழுது இந்த 15 வயது பெண் என்னுடன் பேசியது என், அந்த நினைவுகளை தூண்டியது அந்த பெண்ணின் சாயல் இவளிடம் தெரிந்ததால் தானோ, காரணமில்லாமல் நெருக்கம் உணர்ந்தேன்? என்னமோ சம்பந்தமில்லாத யோசனை ன்னு ஒதிக்கினேன்
ஆனால் அப்படி யில்லை அப்புறம் நடந்தது !எங்கள் வீட்டுக்கு வருட சீர் கொடுக்கும் போதெல்லாம் அந்த பெண்வந்தாள்!
என் மருமகள் முகம் சுளிக்க ஆரமபித்தாள்
பிறகு அவளுடைய படிப்புக்கு என்னிடம் யோசனை கேட்கிறாள் மேல் படிப்புக்கும்! தினமும் வாஸப்பில் வாய்ஸ் மெயில் பேச்சு
பிள்ளைகள் நேரிடையாக கேள்வி கேட்க தொடங்கி விட்டார்கள்! நான் கொஞ்சம் கோபக்காரன் யார் துணையும் விரும்பாதவன் !நானும் அந்த பெண்ணிடம் சொல்லி பார்த்தேன் என அவள் பிடிவாகமாகயிருப்பகுபோல் தெரிந்தாள் எனக்கு பல்வலிவந்து மிகவும் துடித்த பொழுது ரத்தகொதிப்பும் சேர்ந்து கொண்டது எல்லோரையம் தவிரத்தேன் ஆனால் அவளிடம் பேச்சு குறையவில்லை!
ஏதோநட்புதானேத்தவிர
வேறெதுவும் இருப்பதாக எனக்கும் தெரியவில்லை யாரிடமும் விளக்கவும் முடியவில்லை ஆனால் உடல்மெலியதொடங்கியது தேவையில்லாமல் எல்லோர் வெறுப்புக்கும் ஆளாகும்படியாகிவிட்டது !அவள் பாராமெடிக்கல் ரத்தபரிசோதகராக பதவிக்கும் உதவநேறிட்டது நண்பர் மூலம்!
என் உடல் பலவீனம்! வீட்டை விட முடியவில்லை என் மனைவியும் வெறுப்பது புரிந்தது ! பலவீனமாகிவிட்ட என்னை கொரோனா சுலபமாக பிடித்துகொண்டுவிட்டது என் உறவுகள் மறந்தாலும் பாசத்தால் தவித்தாலும் ஒதுஙகியே தீர வண்டிய நிலை! மருத்துவமனை வாசம் அவளே சேர்த்தாள்
அவளாலும் விட்டு போக முடியவில்லை
என்னாலும் போராட மடியவில்லை
இன்று மாலை வீட்டுக்கு போக சொன்னேன் நிறைய பேசினாள்! திருமணம் செய்துக் கொள்,என்றேன் மருத்துவமனை தன் என் வீடு என்கிறாள்!
ஏன் என்னை விடாமல் இருக்கிறாய்என்று விருப்பமில்லாமல் கேட்டேன்
அதுக்கு தான் பிறந்தேன் னு சொல்லிவிட்டு சிரித்தாள்! ஒருநாள் காரில் வந்து நிற்கப் போகிறேன் பார் அவன்முன் என்று சொன்னவளாக இவள் இருக்க வாய்ப்பில்லை !
மறுஜன்மமோ?
அவள் சிரித்துக்கொண்டேயிருந்தாள்! என் நெஞ்சில் ஏதோ இருக்கமாக பிடித்து நெரிக்கிறது! வலித்தது !!அவளுக்கு அன்று வலித்ததுபோல!
கண்இருண்டுவர அவள் பாசத்துடனா பழிவாங்கும் பார்வையுடனா,அல்லது பரிதாூத்துடனா புரியவிடாமல் பார்க்கிறாள்!  மன்னித்துவிடு என்கிறேன்! என் கண்கள் மூடுகிறாள் !அமைதியடைந்துகொண்டிருக்கிறேன்!
நான் அடிக்கடி படிக்கும் மகாபாரத கதையில் பீஷ்மரை நோக்கி அம்பு போட அர்ஜுனன் பின் ஒளிந்து நின்று சிகண்டி போல் இவளோ? நானும் பீஷ்மனோ? !!
பீஷ்மநாகயிருந்தால் காலை வரை உயிர் படித்திருக்க முடியுமோ  பார்க்கலாம்
தொண்டையில் கொரோனா தாக்கம் கூடிக்கொண்டேயிருக்கக காலையும் வந்துவிட்டது அவள் என் உறவுகள் கவலையுடன் நிற்கிறார்கள்! அம்பு படுக்கையில் தள்ளியவர்கள்! யாரை குறை சொல்வது? யாரிடமும் வெறுப்பு விருப்பம் குறையத் தொடங்கி சில நொடிகள் வலி தொண்டையில் அதிகரித்து எல்லாம் அடங்குவது மட்டும் தெரிகிறது!
பிறகு மனதில் நினைவுகள் விலக விலக
ஆகாயத்தில் கலப்பது போல் ஒரே உணர்வு
உறவுகள் பார்வை முன் கறையை அந்த பெண்ணும் மறைய தொடங்கி ஒரே வெளிச்சத்தில் கலக்கிறேன் !




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக